Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி,தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் வர்க்கீஸ்(64). ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ.யான இவர்,கடந்த 11-ம் தேதி குடும்பத்தினருடன் சொந்த ஊரான கன்னியாகுமரிக்குச் சென்றார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய மகன் பெஞ்சமின்(37) மட்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பெஞ்சமின் வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ள ஆவடி போலீஸார், நகை திருடிய மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT