Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அரசு தடை விதித்தது. இதையடுத்து, தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனக் கூறியும், தடையை ரத்து செய்ய வலி யுறுத்தியும் சுற்றுலா தொழில் புரிவோர் மற்றும் பொதுமக்கள் மூஞ்சிக்கல் பகுதியில் நேற்று அற வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் முழுவதும் உள்ள பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கோடை சீசனில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா தொழில் புரிவோர் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதில் இருந்து கடந்த சில மாதங்களாக படிப்படியாக சுற்றுலாவை நம்பி பல்வேறு தொழில்கள் செய்து வருவோர் மீண்டுவந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறியும், தடையை நீக்கி கட்டுப்பாடுகளுடன் பயணிகளை அனுமதிக்க வலியுறுத் தியும் மூஞ்சிக்கல்லில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஹோட்டல் உரிமையாளர் கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டிகள் சங்கம், ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் சங்கம் உள்ளிட்ட சுற்றுலா தொழில் புரியும் பல்வேறு சங்கங்கள் போராட்டத்தில் கலந்துகொண்டன. 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங் கேற்றனர்.
போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவக்குமார், டி.எஸ்.பி. ஆத்மநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று பதில் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர்.
இன்று காலை 11 மணி வரை போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து கலைந்து சென்றனர். இன்று காலை 11 மணிக்குள் உரிய முடிவு அறிவிக்கவில்லை எனில் மீண்டும் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் இ.பெ.செந்தில்குமார் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜயலட்சுமியை சந்தித்து, கொடைக்கானல் மக்க ளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சுற்றுலாபயணிகளுக்கு அனுமதிவழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அரசுக்கு தெரியப்படுத்துவதாக ஆட்சியர் உறுதி அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT