Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

சுகாதார நெருக்கடியை அறிவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கோரிக்கை :

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், தேசிய சுகாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கபில் சிபல் நேற்று தனது ட்விட்டர் பதிவில், “கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணம் அடைவோரை விட அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனவே தேசிய சுகாதார நெருக்கடி நிலையை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும். தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும். மக்களின் உயிரை நீதிமன்றங்கள் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரப்படி, புதிதாக 24 மணி நேரத்தில் 2,61,500 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 1,47,88,109 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் தொடர்ந்து 4-வது நாளாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x