Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

எரகுடியில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட எரகுடி கடைவீதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உரம் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண் டும். விவசாய மும்முனை மின் விநியோகத்தில் தடை ஏற்படு வதை சீரமைக்க வேண்டும். 3 புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க உப்பிலியபுரம் ஒன்றியத் தலைவர் ஜி.முத்துக்குமார் தலைமை வகித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை உறுப்பினர் ஹரி பாஸ்கர், விவசாய தொழிலாளர் சங்க உப்பிலியபுரம் ஒன்றியத் தலைவர் ஏ.கணேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க உப்பிலியபுரம் ஒன்றிய துணைத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் டி.முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x