Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - ஒரே நாளில் 328 பேருக்கு கரோனா :

கடலூர், விழுப்பும், கள்ளக்குறி்ச்சி மாவட்டங்களில் நேற்று 328 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 190 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுவரை 27,444 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 69 பேர் உட்பட 25,964 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.இதன் மூலம் 11,369 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 9 பேர் உட்பட 10,929 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 332 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 16,335 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 83 பேர் உட்பட15,700 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.தற்போது 521 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x