Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

சோழவந்தான் திமுக வேட்பாளருக்கு முன்ஜாமீன் :

மதுரை சோழவந்தான் திமுக வேட்பாளர் வெங்கடேசன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக அதிமுகவினர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் போலீ ஸார் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி சந்திரசேகரன் விசாரித்து, திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர்

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. முசிறி திமுக தேர்தல் அலுவலகத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது குறித்து பேசியது தொடர்பாக கே.என்.நேரு மீது முசிறி காவல் நிலையத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழு புகார் அளித்தது. இதன்பேரில் கே.என்.நேரு மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் நேரு மனு தாக்கல் செய்தார். இந்த மனு திங்கள் கிழமை விசாரணைக்கு வரு கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x