Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM

முகக்கவசம் அணியாத - ரயில் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் :

மதுரை ரயில்வே கோட்ட நிர் வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் முகக் கவசம் அணியாதவர்கள் மீது பல்வேறு மாநில அரசுகள் அபராதம் விதித்து வருகின்றன. ரயில்வே நிர்வாகமும் பயணிகள் முகக்கவசம் அணிவதை வலியுறுத்த விரும்புகிறது. பய ணிகள் ரயில் நிலையத்தில் நுழையும்போதும், ரயில் நிலைய ங்களில் இருக்கும் போதும், ரயிலில் பயணம் செய்யும்போதும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந் திருக்க வேண்டும்.

இதை மீறுபவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 2012-ன் கீழ் ரூ.500 அபராதம் விதிக் கப்படும்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வரு கிறது. அபராதம் விதிக்க ரயில் நிலைய மேலாளர், ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், பயணச்சீட்டு பரிசோதகர் அல்லது அதே நிலையில் உள்ள ரயில் இயக்க அலுவலர், ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆகி யோருக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x