Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM

50 சதவீத மத்திய அரசு ஊழியர்கள் : வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதி :

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம், அரசு ஊழியர்களுக்காக புதிய வழிகாட்டு நெறிகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சகம், தகவல்-ஒலிபரப்புத் துறை, நுகர்வோர் விவகாரத் துறை, உணவு-பொது வழங்கல் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் துணை செயலாளர்கள் நிலையிலான அதிகாரிகள் தினமும் அலுவலகத்துக்கு வர வேண்டும்.

குரூப் பி, சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்கலாம். வீட்டில் இருந்து பணியாற்றும்போது 3 பணி நேரங்களை நிர்ணயிக்கலாம். காலை 9 மணி முதல் 5.30 மண வரை, காலை 9.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை என பணி நேரத்தை நிர்ணயிக்கலாம்.

வீட்டில் இருந்து பணியாற்றும் அலுவலர்கள் மூத்த அதிகாரிகளுடன் மின்னணு சாதனங்கள் மூலம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். அவசர நிலையின்போது மூத்த அதிகாரிகள் அழைத்தால் கண்டிப்பாக அலுவலகம் செல்ல வேண்டும்.

இவ்வாறு வழிகாட்டு நெறியில் உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x