Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM

டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா :

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி நாள் விழா இணையவழியில் நேற்று நடந்தது. துணை முதல்வர் லில்லி ஜெயசீலி பாலசிங் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து வாழ்நாள் சாதனையாளர், முனைவர் பட்டம் பெற்றவர்கள், பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த இதழ்களில் ஆய்வுக் கட்டுரை எழுதியோர், பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்களை கவுரவித்து நினைவுப் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.

டோக் பெருமாட்டிக் கல்லூரி நிறுவனர் வாழ்க்கை வரலாறு ‘ஆதிமைவேர்' என்ற பெயரில் நாடகமாக நூலாக்கம் செய்து வெளியிடப்பட்டது. முன்னதாக நூலாசிரியர் தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் நாடகவியல் துறைத் தலைவர் மு.ராமசாமி வெளியிட, நூலின் முதல் பிரதியை சிறப்பு விருந்தினர் முனைவர் காட்வின் ரூபஸ் அருளானந்தர், இரண்டாம் பிரதியை கல்லூரி முதல்வர் கிறிஸ்டியானா சிங் பெற்றுக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x