Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயில் தெற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(42). பிளம்பர். இவர், கடந்த 12-ம் தேதி திருமுல்லைவாயில் பச்சையம்மன் நகர் பகுதியில் ஒரு வீட்டில் பைப்லைன் வால்வு மாற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, திடீரென முதல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்த ராஜேந்திரன், பலத்த காயங்களுடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமுல்லை வாயில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT