Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

முதல்வர் பழனிசாமி விஷூ வாழ்த்து :

மலையாள மொழி பேசும் மக்கள் இன்று விஷூ பண்டிகையை கொண்டாடுவதை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட வாழ்த்துச்செய்தி:

புத்தாண்டான விஷூ திருநாளைஉற்சாகமாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எவ்விடத்தில் வாழ்ந்தாலும் தங்கள்பாரம்பரியத்தையும், மரபுகளையும் பேணிப் பாதுகாத்து வாழும் மலையாள மொழி பேசும் மக்கள்,புத்தாண்டு திருநாளான விஷூ திருநாளன்று அரிசி, காய்கனிகள், கண்ணாடி, கொன்றை மலர்கள், தங்க நாணயங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விஷூக்கனி கண்டு, மலரும் இப்புத்தாண்டு அனைத்து நலன்களையும் வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலர வேண்டும் என்று இறைவனைவழிபட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். இப்புத்தாண்டு மலையாள மொழி பேசும் மக்களின் வாழ்வில் அன்பையும் மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வாழ்த்துகிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: விஷூ என்பது வசந்தத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. கேரளா, தமிழகத்தில் வாழும் கேரள மக்கள் அனைவருக்கும் இனிய விஷூ தின நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x