Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM
உலகின் மிகப்பெரிய திறந்தநிலை பல்கலைக்கழகமான இந்திரா காந்திதேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) 34-வது பட்டமளிப்புவிழா டெல்லியில் உள்ள இக்னோ வளாகத்தில் நாளை (ஏப்.15) காலை11 மணிக்கு நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சி இக்னோவின் சேனல் (Gyan Darshan), ஸ்வயம் பிரபா சேனல்கள் மற்றும் இக்னோ ஃபேஸ்புக் (https://www.facebook.com/OfficialPageIGNOU) மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும் என இக்னோ சென்னை மண்டல இயக்குநர் கே.பன்னீர்செல்வம் தெரிவி்த்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT