Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

சத்தீஸ்கர் மருத்துவமனை சவக்கிடங்கில் இடமில்லாமல் தவிக்கும் நிர்வாகம் :

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 1ம் தேதி முதல் மாநிலத்தில் 861 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். ராய்ப்பூரில் உள்ள அம்பேத்கர் அரசு மருத்துவமனையில், இறந்தவர்களின் உடல்கள் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. எனினும், இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சவக்கிடங்கில் உடல்களை வைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. சவக்கிடங்குக்கு வெளியே ஸ்டெரக்சர்களில் உடல்களை கிடத்தி வைக்கப்பட்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இறந்த உடல்களுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு காலை முதல் நள்ளிரவு வரை தகனம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் தியோ கூறுகையில், ‘‘ஒட்டுமொத்தமாக நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. கரோனா பாதிப்புகளும் இறப்புகளும் அதிகரித்திருப்பது அதிகாரிகளுக்கு சவாலாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x