Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM
மோடி தலைமையிலான 7 ஆண்டு ஆட்சியில் மக்கள் மீதான சுமைகள் அதிகரித்துள்ளன என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 7-வதுஆண்டை நிறைவு செய்ய இருக்கிறது. இந்த 7 ஆண்டுகளில் பணவீக்கம் உயர்வு, உற்பத்தி வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு குறைவு, பங்குச் சந்தையில் சரிவு, நசுக்கும் வரிகள், அதிகரிக்கும் வேலையின்மை என்று மக்களுக்கான சுமைகள் அதிகரித்துள்ளன.
மத்திய அரசின் மீதான விமர்சனங்களை பிரதமர் மோடி பொருட்படுத்துவது இல்லை. சிறந்த பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளையும் அவர் கவனத்தில் கொள்வதில்லை. இதுதான் மோடியின் பிரச்சினை. குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும். ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்’ என்ற திருக்குறளை மோடிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT