Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM
கன்னியாகுமரி தொடங்கி தமிழகத்தின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் நாளை (15-ம் தேதி) முதல்61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழக கிழக்கு கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு, ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கன்னியாகுமரி அருகே சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகப் பகுதி தொடங்கி, திருவள்ளூர் மாவட்டம் வரையான கிழக்கு கடலோரப் பகுதிகள் முழுவதும், 61 நாட்களுக்கான மீன்பிடிதடைக்காலம் நாளை தொடங்குகிறது. இத்தடைக் காலத்தில் இழுவலை விசைப்படகுகள், தூண்டில் வலை விசைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது.
தடையை மீறி மீன்பிடி தொழில் செய்வோர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்ட விசைப்படகின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன், மானிய விலையில் வழங்கப்படும் டீசலும் நிறுத்தப்படும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்துள்ளார்.
எனினும், கரையோரப் பகுதிகளில் மீன் பிடிக்கும் நாட்டுப்படகுகள், பைபர் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கத் தடை இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT