Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் :

கோவை: ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்கள் தூய்மைப் பணி, கரோனா நோய்த் தடுப்பு, டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 27-வது வார்டு பகுதி தூய்மைப் பணியாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னவேடம்பட்டி வார்டு அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, 'கடந்த மாதத்துக்கான சம்பளம் எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. எங்களுக்கும் குடும்பம் உள்ளது. பல்வேறு கடினமான சூழல்கள் உள்ளன. எனவே சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்’ என்றனர். கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி மண்டல அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x