Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM
மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் வாக்குகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முதல்வர் மம்தா மீது புகார் எழுந்தது. தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக முதல்வர் மம்தா மீது பாஜகபுகார் அளித்திருந்தது. இந்த புகார்மீது முதல்வர் மம்தா அளித்தவிளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி, பிரச்சாரத்தில் ஈடுபட ஒருநாள் தடை விதித்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மம்தா மீது பாஜக அளித்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
திங்கள்கிழமை இரவு 8 மணி முதல் (நேற்று) செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை இந்தத் தடைஅமலில் இருக்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT