Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM
புனித ரமலான் நோன்புக்கு பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிக்க இலவச அரிசியை உடனே வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்க தமிழக அரசின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவச பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு சட்டப் பேரவைத்தேர்தல் நடந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில்உள்ளதாலும் பள்ளிவாசல்களுக்கான அரிசி வழங்குவது தொடர்பான அறிவிப்பு தாமதமாகி வருகிறது.
புனித ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கும் அரிசிஎன்பது வழக்கமான நடைமுறைதான்.
புனித ரமலான் நோன்பு தொடங்க ஒருசில நாட்களே உள்ளநிலையில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை தமிழக அரசுவிரைவில் பெற்று பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிக்கத் தேவையான பச்சரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT