Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் :

கொடைக்கானல்

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட ஏராளமான பயணிகள் நேற்று கொடைக்கானல் வந்தனர்.

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க கோடை வாசஸ்தலமான கொடைக்கானலுக்கு அதிகம் பேர் செல்லத் தொடங்கியுள்ளனர். தேர்தல் வரை கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்திருந்தது. தற்போது தேர்தல் முடிந்த பின்னர் வார விடுமுறையான கடந்த இரு நாட்களாக கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட், குணா குகை, தூண் பாறை, கோக்கர்ஸ் வாக் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர். தூண் பாறைகளை மேகக்கூட்டங்கள் தழுவிச் செல்லும் இயற்கைக் காட்சியை கண்டு ரசித்தனர். ஏரியில் படகு சவாரி, ஏரிச்சாலையில் குதிரை சவாரி செய்தனர்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ், இரவில் 13 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவியது.

கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த முகக் கவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x