Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் உயிரியியல் தொழில் நுட்பத் துறையில் எம்.எஸ்சி. மாணவி ஒருவரின் தந்தைக்கு கரோனா பாதிப்பு இருந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்குப் பரிசோதனை செய்தபோது, மாணவிக்கும் கரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையொட்டி உயிரியியல் தொழில்நுட்பத்துறையில் கிருமிநாசினி தெளிப்பு உள் ளிட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அத்துறையில் பணி புரியும் பேராசிரியர்கள், ஊழியர்களுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT