Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM
தருமபுரி நகரில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு நகராட்சி பணியாளர்கள் அபராதம் விதித்தனர்.
தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று நகராட்சி பணியாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முகக் கவசம் அணியாமல் சென்ற 14 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.2800 அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல, தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் அனைத்திலும், இருக்கைகளில் மட்டும் பயணிகள் உள்ளனரா என்பதை நகராட்சிக்குழுவினர் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர். பேருந்து களை கண்காணிப்பது, பொதுஇடங்களில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின் பற்றாதவர்களுக்கு அபராதம் விதிப்பது, விதிகளை பின்பற்றாத வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு நடத்துவது போன்ற பணிகள் எதிர்வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று நகராட்சிப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT