Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

திருச்செந்தூர் அருகே விஏஓ மாயம் :

தூத்துக்குடி: திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(31). திருச்செந்தூர் அருகே மேலப் பள்ளிபத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முத்துலெட்சுமி (24). இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகளாகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் 8-ம் தேதி முதல் சரவணன் பணிக்கு செல்லவில்லை.

அவரை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது மனைவி முத்துலட்சுமி திருச்செந்தூர் போலீஸில் கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனு அளித்தார். இதுதொடர்பாக தாலுகா காவல் நிலைய எஸ்ஐ ஸ்டீபன் விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x