Published : 11 Apr 2021 03:18 AM
Last Updated : 11 Apr 2021 03:18 AM
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத் துக்கு குட்கா பொருட்களை கடத்திச் செல்ல முயன்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பல்வேறு மாவட்டங் களுக்கு குட்கா பொருட்கள் கடத்திச் செல்வதாக, மாவட்ட எஸ்பி பண்டிகங்காதருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட் டனர். அவ் வழியே சந்தேகத்துக் கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பதும் அவை சேலத்துக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக பெங்களூரு துடுக்கனஅள்ளி கண்பத்ராம் (24), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சாட்பலராம் (32) ஆகியோரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT