Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
இங்கிலாந்து ராணி இரண்டாம்எலிசபெத்தின் கணவர் பிலிப் (99)சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று மோசமடைந்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தார். தனது வின்சர் கேசில் அரசு மாளிகையில் இளவரசர் பிலிப் மரணம் அடைந்ததை ராணி எலிசபெத் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
1921-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதிபிறந்த பிலிப், 1947-ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இளவரசர் சார்லஸ், இளவரசர்கள் ஆண்ட்ரூ, எட்வர்ட் ஆகிய 3 ஆண்பிள்ளைகளும் இளவரசி ஆனி என்ற பெண்ணும் உள்ளனர். முதுமை காரணமாக 2017-ம்ஆண்டில் பொது வாழ்வில் இருந்து பிலிப் விலகினார்.
இளவரசர் பிலிப்பின் மறைவுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இரங்கல் தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT