Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வரை - ரூ.55.29 கோடி மதிப்பு ரொக்கம், பொருட்கள் பறிமுதல் :

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 6-ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் ரூ.7.36 கோடி தொகை உட்பட ரூ.55.29கோடி மதிப்பிலான பணம், பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி, கடந்த பிப்ர வரி 26-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் நடத்தை விதிகள் அமலுக்குவந்தன.

வாக்கு எண்ணிக்கை தினமான மே 2-ம் தேதி வரை இந்த நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

வாக்காளர்களுக்கு பணம்,பரிசுப் பொருட்கள் விநியோகிப் பதை தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறும்போது, ‘‘மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், நடத்தை விதிகள் அமலானது முதல் வாக்குப்பதிவு தினமான கடந்த 6-ம் தேதி வரை 412 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 252 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

154 புகார்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. 6 புகார்களின் விசாரணை நிலுவையில் உள்ளது. சி-விஜில் செயலி மூலம் 773 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 566 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 206 புகார்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. ஒரு புகாரின் விசாரணை நிலுவையில் உள்ளது.

மாவட்டத்தில் கடந்த 6-ம் தேதி வரை மொத்தம் ரூ.7 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரத்து 128 தொகை மற்றும் ரூ.47 கோடியே 93 லட்சத்து 58 ஆயிரத்து 707 மதிப்புள்ள நகை உள்ளிட்ட இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, ரூ.75.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x