Published : 10 Apr 2021 03:13 AM Last Updated : 10 Apr 2021 03:13 AM
ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு பாதிப்பு : கோவை மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் 200 பேருக்கு மேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், கோவை கருப்ப கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வீதியில் உள்ள 16 வீடுகளில் வசிப்போருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதோடு அந்த வீதியை மூடவும் மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், கருப்ப கவுண்டர் வீதி பகுதியில் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு
WRITE A COMMENT