Published : 10 Apr 2021 03:14 AM
Last Updated : 10 Apr 2021 03:14 AM
ராமேசுவரம் அருகே பாம்பன் சாலை பாலத்தில் இருந்து சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்று காலை கடலில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றார்.
கடலில் விழுந்த அவரை அப்பகுதியில் மீன்பிடித்த பாம்பன் தெற்குவாடியைச் சேர்ந்த மீனவர்கள் உயிருடன் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். மயக்க நிலையில் இருந்த அவரை, ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மரைன் போலீஸார் விசார ணையில் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தமோகர் (40) எனத் தெரிய வந்தது. கடன் பிரச்சினையால் அவர் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்தார். போலீஸார் அவருக்கு மன ரீதியான கவுன்சலிங் கொடுத்து, உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT