Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் உயிரிழப்பு :

கோவை

கோவை உலியம்பாளையம் சக்தி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (63).ஏசி மெக்கானிக்கான இவர், நேற்று முன்தினம் காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் புதிய ஏசியை பொருத்திக்கொண்டிருந்தார்.‌

அப்போது எதிர்பாராத விதமாக சுந்தரராஜன் மீது மின் சாரம் பாய்ந்தது. அங்கிருந் தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் சுந்தர்ராஜன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, அஜாக் கிரதையால் மரணம் ஏற்படுத்தி யதாக வீட்டின் உரிமையாளர் அசோக் மற்றும் சுந்தர்ராஜனின் உதவி எலக்ட்ரீசியன் சண்முகநாதன் ஆகியோர் மீது பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x