Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் 37 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கைகள் கணக்கிடப்பட்டன. இதில் ரூ.1,11,80,396 ரொக்கம், தங்கம் 3 கிலோ 481 கிராம், வெள்ளி 5 கிலோ 430 கிராம், அயல்நாட்டு நோட்டுகள் 174 இருந்தன.
நிகழ்ச்சியில், கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி, உதவி ஆணையர்கள் எஸ்.மோகனசுந்தரம், சு.ஞானசேகரன் (வெக்காளியம்மன் கோயில்), கோயில் மேலாளர் ம.லட்சுமணன், அறநிலையத்துறை ஆய்வர் கு.தமிழ்ச்செல்வி மற்றும் அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர். இதற்கு முன் மார்ச் 23-ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT