Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் பொது அலுவலக சாலையைச் சேர்ந்தவர் சுரேஷ்(35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுரேஷ் நேற்று முன்தினம் தன் மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாரீஸ்வரி பணம் தர மறுத்ததால், சுரேஷ் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கினார். உடனடியாக, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT