Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிப்பு - தினசரி கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது : ஒரே நாளில் 17 பேர் உயிரிழப்பு

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை யில், நேற்று 4 ஆயிரத்தை நெருங்கி யுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தபோது, ஒரே நாளில் அதிகட்சமாக 7 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், புதியதாக கரோனா பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை நேற்று 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

3,986 பேருக்கு தொற்று

இதுதொடர்பாக தமிழக சுகா தாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது:

தமிழகத்தில் நேற்று புதியதாக 3,986 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், ஆண்கள் 2,391 பேர், பெண்கள் 1,595 பேர். அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட் டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. இதில், சென்னையில் மட்டுமே 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 10,685 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று மட்டும் 17 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது. இதில், சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 4 ஆயிரத்து 286 பேர் இறந்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மு.க.தமிழரசுக்கு கரோனா

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசு, திமுக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்கிடையே, அவரது உடல்நிலை சோர்வாக இருந்ததைத் தொடர்ந்து, மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத் துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x