Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM
கூடலூர்: மேல் கூடலூர் பகுதியில் முறையாக தண்ணீர் விநியோகிக்கக் கோரி, கூடலூர் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்டது மேல் கூடலூர் பகுதி. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும், அரசு மருத்துவமனையும் அமைந்துள்ளன. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், முறையாக தண்ணீர் விநியோகிக்கக் கோரியும் கூடலூர் நகராட்சி அலுவலகத்தை நேற்று மக்கள் முற்றுகையிட்டனர். கூடலூர் நகராட்சி ஆணையர் பாஸ்கரன், மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது தண்ணீர் விநியோகத்துக்காக மேல் கூடலூர் பகுதியில் ஓரிரு நாட்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT