Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்பில், மருத்துவ மனைகள், வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மதுரையில் நடந்தது. மாவட்ட அலுவலர் வினோத், தனியார் மருத்துவமனை, ஹோட் டல், வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு தீயணைப்புத் துறை தென் மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் தலைமை வகித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலும் மின்கசிவு காரணமாகவே இது போன்ற தீ விபத்துகள் ஏற்படுகின்றன.
இதுபோன்றநிலை மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை யாக நடவடிக்கை எடுத்து வரு கிறோம்.
மதுரை மாவட்டத்தில் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை தீ தடுப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT