Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர் தொடர்பாக வாக்குச்சாவடி முகவர் சந்தேகம் எழுப்பினால், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சவால் வாக்கு (சேலஞ்ச் வாக்கு) அளிக்க முடிவுசெய்து சம்பந்தப்பட்ட முகவரிடம் கட்டணம் வசூல் செய்து வாக்காளரின் முழு விவரத்தை பெற்று 49ஏ படிவத்தை பூர்த்தி செய்து அவரை வாக்களிக்க அனுமதிக்கலாம் என தேர்தல் ஆணையத்தின் 49ஏ விதி தெரிவிக்கிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல வாக்குச்சாவடி மையங்களில் இந்த படிவம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கேட்டபோது, இது குறித்து அவர்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றனர். இதனால், வாக்களிப்பதில் சில வாக்காளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. சில வாக்குச்சாவடி மையங்களில் அதிகாரிகள் வாக்காளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சோழிங்கநல்லூர் தொகுதி கோவிலம்பாக்கத்தில் இதேபோல் பிரச்சினை ஏற்பட்டது. பின்னர் கடும் போராட்டத்துக்கு இடையே 49ஏ படிவம் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முறையாக பயிற்சி அளித்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றிருக்காது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT