Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM

புதுச்சேரியில் புதிதாக 237 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 2 பேர் உயிரிழப்பு :

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 3,018 பேருக்கு பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 145, காரைக்காலில் 68, ஏனாமில் 9, மாஹேவில் 15 எனமொத்தம் 237 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், காரைக்கால் கென்னடியார் தெருவைச் சேர்ந்த 87 வயது மூதாட்டி காரைக்கால் அரசுமருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 686 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.60 ஆக உள்ளது. மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42,776 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 426, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,347 என மொத்தம் 1,773 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 139 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 40,317 (94.25) ஆக உள்ளது.

இதுவரை 6 லட்சத்து 85 ஆயிரத்து 192 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 30 ஆயிரத்து 675 பரிசோதனைகளுக்கு தொற்றுஇல்லை என முடிவு வந்துள்ளது. மாநிலத்தில் 28,286 சுகாதாரப் பணியாளர்கள், 16,275 முன்களப் பணியாளர்கள், 37,717 பொதுமக்கள் என 82,278 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x