Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறி திருவிடைமருதூரில் 3 கிராம மக்கள் மறியல் :

கும்பகோணம்: திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட 3 கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி மறியலில் ஈடுபட்டனர். பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் வாக்களித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதிக்குட்பட்ட மத்தியூர், மாத்திருப்பு, வாண்டையார்இருப்பு ஆகிய கிராமங்களில் மயான சாலை, குடிநீர், கழிவறை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, இந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி நேற்று மத்தியூரில் 3 கிராம மக்களும் பொதுமக்கள் கருப்புக் கொடியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருப்பனந்தாள் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் இந்த பிரச்சினை குறித்து பின்னர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தா். பின்னர் 3 கிராம மக்களும் 5 மணி நேரத்துக்குப் பின் மதியம் 12.30 மணிக்கு வாக்களிக்க சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x