Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

முக்கடல் நீர்மட்டம் 6 அடியாக சரிவு :

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக உள்ள நிலையில், அணைகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

நாகர்கோவில் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யும் முக்கடல்அணையின் நீர்மட்டம் 6 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 7.42 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மழையின்றி இதே நிலை நீடித்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்சூழல் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர்ஆதாரமான பேச்சிப்பாறை அணையில் 38.80 அடியும், பெருஞ்சாணி அணையில் 52.33 அடியும் தண்ணீர் உள்ளது. சிற்றாறு ஒன்றில் 5.54 அடி, சிற்றாறு இரண்டில் 5.64 அடி, பொய்கையில் 18.40 அடி, மாம்பழத்துறையாறில் 14.68 அடி தண்ணீர் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x