Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM
சேத்துப்பட்டு அடுத்த மண்டகொளத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது திமுக மற்றும் அதிமுகவினர் திரண்டு ஆதரவு திரட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால், இரண்டு தரப்புக்கும் தகராறு எழுந்தது. அதன் பின்னர், காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி விரட்டப்பட்டனர். இதில், அதிமுகவினர் காயமடைந்தனர். பின்னர், அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். மேலும், பாமக பிரமுகர் கருணாகரன் என்பவர், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை, அங்கிருந்தவர்கள் தடுத்து நிறுத்தினர். இதையறிந்த அதிமுக வேட்பாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்று சமரசம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT