Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

வாக்காளர்களுக்கு பணம் தந்ததாக திமுகவை சேர்ந்தவர் கைது :

ஆவடி தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல்- எட்டியம்மன் நகரில் நேற்று காலை வாக்காளர்களுக்கு சிலர் பணம் விநியோகிப்பதாக, தொகுதி தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற பறக்கும் படை அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, திமுகவைச் சேர்ந்த சசிகுமார்(50), வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப்புடன், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.36,500-ஐ தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுகுறித்து ஆவடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருமுல்லைவாயல் போலீஸார், சசிகுமாரை கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x