Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

ஏனாமில் மாயமான சுயேச்சை வேட்பாளர் காயங்களுடன் மீட்பு :

காயங்களுடன் மீட்கப்பட்ட ஏனாம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் பொம்மடி துர்கா பிரசாத்.

புதுச்சேரி

புதுச்சேரி பிராந்தியம் ஏனாமில் மாயமான சுயேச்சை வேட்பாளர் காயங்களுடன் நேற்று மீட்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. ஆந்திரம் அருகேயுள்ள ஏனாம் பிராந்தியத்தில் அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் தனது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார். தொடர்ந்து காங்கி ரஸில் இருந்து பலரை என்.ஆர்.காங்கிரஸ் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் இறங்கினார்.

இந்நிலையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதில் ஏனாமும் ஒன்று. அத்தொகுதியில் அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இதற்கிடையே, ஏனாமில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் யாரையும் நிறுத்தவில்லை. இந்நிலையில் அங்கு சுயேச்சையாக போட்டியிட பொம்மடி துர்கா பிரசாத் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த 1-ம் தேதி முதல் அவரை காணவில்லை. இதுகுறித்து அவரின் மனைவி அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். தலைமை தேர்தல் அதிகாரி சுர்பீர் சிங்கும், "போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அவர் மாயமானதால் தேர்தலுக்கு பாதிப்பு இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கோதாவரி ஆற்றுப் பகுதியில் ஒரு தீவில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த பொம்மடி துர்கா பிரசாத்தை போலீஸார் நேற்று மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த் தனர்.

நடந்த சம்பவம் பற்றி அவரிடம் விசாரிக்கவும், வாக்குமூலம் பெறவும் போலீஸார் திட்டமிட்டுள் ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x