Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
புகழ்பெற்ற புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியர்களே நியமிக்கப்படாத சூழலில், இந்த ஆண்டு ஓய்வு பெறப் போகும் மூன்றே பேராசிரியர்களுடன் இயங்கும் சூழல் நிலவுகிறது. பேராசிரியர் பணி நியமனத்தால் கடும் சிக்கலில் ஆராய்ச்சி மாணவர்கள் தவிப்பதாக 'இந்து தமிழ்' நாளிதழில் அண்மையில் செய்தி வெளியானது. இந்நிலையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் அங்கிருந்த நூலகத்தையும், பதிப் பித்துள்ள நூல்களையும், வெளியீடுகளையும், முக்கிய நூலகத்தையும் பார்த்தார்.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகளிடம், “காலியிடங்களான 6 பேராசிரியர்களை நிரப்புவ தற்கான முயற்சிகளை எடுக்கிறேன். இந்நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அத்தனை நூல் களையும் மின்னணு நூல்களாக மாற்றுங்கள். இந்நிறுவன வளர்ச்சிக்கான வசதிகளையும் செய்து தருகிறேன். நிறுவனத்தின் கட்டமைப் புகள் பலப்படுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT