Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM

சாலையில் வீசப்பட்ட ரூ.23 ஆயிரம் பறிமுதல் :

தி.மலை மாவட்டம் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட நாவல் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தேர்தல் பறக்கும் படையினர் ரோந்து சென்றனர். அப்போது, அப் பகுதியில், பணம் விநியோகம் நடைபெற்றது தெரியவந்ததும், அவர்களை பிடிக்க முயன்றனர். இதையறிந்த அந்த கும்பல், சாலையில் பணத்தை வீசி விட்டு தப்பித்துச் சென்றனர். பின்னர், சாலையில் இருந்த பணத்தை சேகரித்து கணக்கிட்டபோது ரூ.23 ஆயிரம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த பணத்தை தேர்தல் அதிகாரிகள் மூலம் கரு வூலத்தில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x