Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM

கண்ணியத்தை கடைபிடிப்போம்! :

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘சுல்தான்’ திரைப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த 2-ம் தேதி வெளியான இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது:

‘சுல்தான்’ திரைப்படம் மிகப்பெரிய ஆரம்ப வசூலை கொடுத்ததில் மகிழ்ச்சி. கார்த்திக்கு இதுவரை வெளியான படங்களில் அதிகபட்சமுதல்நாள் வசூல் இந்த படம்தான். சிலருக்கு ‘சுல்தான்’ குறித்து வேறு அபிப்ராயம் இருக்கலாம். அதை மதிக்கிறேன். ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளில் கண்ணியத்தை கடைபிடியுங்கள். ஏனென்றால், திரைப்படங்களும், ரசிகர்களும்தான் நீங்கள் உண்ணும் உணவுக்கு காரணமாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x