Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் தேர்தலில் 80 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வாக்குச்சாவடிகளுக்குச் செல்ல, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து ஊபர் நிறுவனம் வாக்குப்பதிவு நாளன்று இலவச சவாரி வழங்குகிறது.
சென்னை, திருச்சி, கோவை மாநகர மக்கள், இந்த சேவையை ஊபர் ஸ்மார்ட் கைபேசி செயலி வழியாகப் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT