Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

புதுச்சேரியில் - புதிதாக 227 பேருக்கு கரோனா தொற்று :

புதுச்சேரியில் புதிதாக 227 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 2,416 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 160, காரைக்காலில் 63, ஏனாமில் ஒருவர், மாஹேவில் 3 எனமொத்தம் 227 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந் தோர் எண்ணிக்கை 684 ஆகவும், இறப்பு விகிதம் 1.61 ஆகவும் உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 42,359 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 404, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,188 என மொத்தமாக 1,592 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 109 பேர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண் ணிக்கை 40,083 (94.63 சதவீதம்) ஆக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 74 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 27 ஆயிரத்து 106 பரி சோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. இதுவரை மொத்தமாக 80,198 கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 160, காரைக்காலில் 63, ஏனாமில் ஒருவர், மாஹேவில் 3 என மொத்தம் 227 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x