Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

காட்டுமன்னார்கோவிலில் நான் வெற்றி பெற்றிருந்தால் - தமிழக அரசியலே மாறி இருக்கும் : திருமாவளவன் எம்பி பேச்சு

வானூர் தொகுதிக்குட்பட்ட கிளியனூரில் விசிக வேட்பாளர் வன்னிஅரசை ஆதரித்து திருமாவளவன் எம்பி பேசுகிறார்.

விழுப்புரம்

வானூர் தொகுதிக்குட்பட்ட கிளிய னூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து நேற்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி பேசிய தாவது:

தாழ்த்தப்பட்ட மக்களிடம் பணம் கொடுத்து வாக்குகளை கலைத்து விடலாம் என்று அதிமுக எண்ணுகிறது. காட்டுமன் னார்கோவில் தொகுதியில் நான் வெற்றி பெற்றிருந்தால் தமிழக அரசியலே மாறி இருக்கும். வெறும் 84 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன்.

அம்பேத்கரின் கொள்கை எதிரி பாஜக. இப்போதுள்ள அதிமுக எம்ஜிஆர், ஜெயலலிதாவுடையது அல்ல. பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்றார் ஜெயலலிதா, ஆனால் இப்பொது பழனிசாமி, பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக நாம் சட்டசபைக்கு செல்லவில்லை. இத்தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அதேநேரம் பாஜக படுதோல்வி அடையவும் வேண்டும். நமக்கு எதிரி அதிமுக அல்ல பாஜக. இத்தேர்தலில் அதிமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டாகும். விசிகவுக்கு எத்தனை இடம் என்பதைவிட பாஜகவுக்கு இடம் இல்லை என்பதே முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x