Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM
திருமங்கலம் - துலுக்கப்பட்டி ரயில் நிலை யங்கள் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த ரயில் பாதையிலும் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த ரயில் பாதையிலும் சீரமைப்பு பணிகள் நடந்தன.
இதற்காக, 4 நாட்களாக குருவாயூர் சிறப்பு ரயில், திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது.
திருமங்கலம், கள்ளிக்குடி விருதுநகர், துலுக்கப்பட்டி ரயில் நிலையங்களில் உள்ள ரயில் பாதைகளிலும், வழியிலுள்ள ரயில் பாதைகளிலும் பகல் நேரத்தில் சீரமைப்பு பணி தொடர்ந்து நடக்கிறது. இப் பணிகள் 41 கி.மீ. ரயில் பிரிவில் நடந்தன. இதனிடையே சீரமைப்பு பணிகளையொட்டி, சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு சிறப்பு ரயில் மானாமதுரையிலேயே நிறுத்தப்பட்டது.
இதையடுத்து ரயில் பயணிகளை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க, மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சனிக்கிழமை அதிகாலை 340 பயணிகளும் ஞாயிறு அதிகாலை 332 பயணிகளும் மானாமதுரையில் இருந்து தலா 6 அரசு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக கோட்ட அதி காரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT