Published : 04 Apr 2021 03:15 AM
Last Updated : 04 Apr 2021 03:15 AM
கவுசிகா நதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கவுண்டம்பாளையம் தொகுதி திமுக வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் கூறியுள்ளார்.
கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில், திமுக வேட்பாளராக போட்டியிடும் பையா என்ற ஆர்.கிருஷ்ணன், தனது தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சின்னத்தடாகம், 24- வீரபாண்டி, சரவணம்பட்டிக்கு உட்பட்ட நஞ்சே கவுண்டன் புதூர், சின்னவேடம்பட்டி, வீரமாட்சியம்மன் கோயில், காளப்பட்டி, விளாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பிரச்சாரத்தில், வேட்பாளர் பையா என்ற ஆர்.கிருஷ்ணன் பேசும்போது, ‘‘இப்பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும்.
மொபைல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் புகார் தெரிவிக்கும் முறை தொகுதியில் அறிமுகப்படுத்தப்படும். வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப் படும்.
மத்திய மாநில அரசுத் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லவும், அதன் மூலம் பயனடையவும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கவுசிகா நதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தன்னார்வலர்களுடன் இணைந்து பராமரிப்பின்றி இருக்கும் கோயில்களை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும்,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT