Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

இன்றும், நாளையும் 230 இணைப்பு பேருந்துகள் :

சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் இருந்து, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 230 இணைப்பு பேருந்துகள் இன்றும், நாளையும் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து 5-ம் தேதி வரையில் 3,090 சிறப்பு பேருந்துகள் உட்பட 14 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் இன்றும், நாளையும் மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சென்னையில் இருந்து பண்டிகை நாட்களில் இயக்குவது போல், மாதவரம், தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படவுள்ளன.

எனவே மேற்கண்ட பேருந்து நிலையங்களில் இருந்து முக்கிய வழித்தடங்களில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக 230 மாநகர இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x