Published : 04 Apr 2021 03:17 AM
Last Updated : 04 Apr 2021 03:17 AM

பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நாளை நிறைவு :

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் களுக்கும் நாளைக்குள் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி நிறைவு பெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதி களில் 9 லட்சத்து 65 ஆயிரத்து 307 பேர் வாக்காளிக்க உள்ளனர். இதற்காக, 1,371 வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் பூத் சிலிப் விநியோகம் செய்யும் பணி கடந்த 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி நாளை (5-ம் தேதியுடன்) முடிகிறது. இந்த பூத் சிலிப்பில் வாக்காளர் பெயர், வரிசை எண், பாகம் எண், சட்டப்பேரவைத் தொகுதி உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக இருக்கும்.

இந்த தகவல் சீட்டுடன் வாக் காளர் அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள 11 வகையான அரசு அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x